வெள்ளி, 30 செப்டம்பர், 2022

மூலிகைகளுக்கு சாப நிவர்த்தி செய்யும் முறை

 நாம் ஏற்கனவே முன்னர் ஒரு பதிவில் மூலிகைகளுக்கு உயிர் கொடுக்கும் முறையை பற்றி பதிவிட்டிருக்கின்றோம்...

எந்த ஒரு மூலிகையாக இருந்தாலும் நாம் தேவைக்கு அதனை பறிக்கும்பொழுது சாதாரணமாக பறித்துவிட்டால் அந்த மூலிகையின் குணம் நமக்கு பலனளிக்காமல் போய்விடும். 

முறையாக காப்புக்கட்டி தீபாரதனை காட்டி பொங்கல் முதலியவை வைத்து பூஜை செய்த பின்னர் சாப நிவர்த்தி செய்து அந்த மூலிகைகளுக்கு உயிரூட்ட வேண்டும்.அப்போதுதான் அந்த மூலிகையின் பலன் நமக்கு முழுமையாக கிடைக்கும்.

ஒரு சில மூலிகைகளுக்கு சேவல் போன்றவைகள் பழி கொடுக்க வேண்டும்.அது பற்றி இன்னொரு பதிவில் விரிவாக கொள்கின்றேன்.

இன்று அந்த அரிய குணமுள்ள மூலிகைகளுக்கு சாப நிவர்த்தி செய்யும் முறையைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.



நமக்கு எந்த மூலிகை தேவைப்படுகின்றதோ அந்த மூலிகையை சுற்றி நன்கு சுத்தம் செய்து

பின்னர் வழக்கம்போல் முறையாக பூஜை முறைகளை செய்து 


"ஓம் சத்தி சாபம்           நசிநசி

சகல சாபம்                    நசிநசி 

சித்தர் சாபம்                 நசிநசி 

மூலிகை சாபம்            நசிநசி 

சகல தேவர்கள் சாபம் நசிநசி 

ஓம் காளி ஓம் பிடாரி 

ஓம் நசிமசி வய சுவாகா"... என்கின்ற மந்திரத்தை ஒன்பது தடவை கூறி விட்டு நகம் படாமல் மூலிகைகளை பறிக்க வேண்டும்.

இவ்வாறு முறையாக செய்யும்போது நாம் பறிக்கும் மூலிகையானது முழுமையாக பலனளிக்கும்.அந்த மூலிகையின் சாபம் நம்மை தாக்காமல் காத்துக் கொள்ளலாம்.

நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...






புதன், 28 செப்டம்பர், 2022

விந்து வெளியேறாமல் தடுக்கும் வித்தை

விந்து விட்டவன் நொந்து கெடுவான் 

என்பது சித்தர்கள் வாக்கு.

அதிகமாக விந்துவை வெளியேற்றுவதால் சீக்கிரம் நமது உடல் வலுவிழந்து விடும்.

விந்துவை வெளியேற்றுவதால் பல உடல் உபாதைகளுக்கு ஆட்படுகின்றோம்.

சரி இப்போது விந்துவை எப்படி வெளியேறாமல் தடுப்பது என்ற வித்தையைக்காண்போம்.



ஆடுதின்னாப்பாளை விதை

பூமிச்சர்க்கரைகிழங்கு 

பூனைக்காலி விதை இவை மூன்றையும் இரண்டிரண்டு விராகனெடை எடுத்து பசும்பால் விட்டு நன்றாக அரைத்து காலை மாலை என இரண்டு வேளைகள் 12 நாள் சாப்பிட்டு வர விந்து கெட்டிப்படும்.

எத்தனை பெண்களை புணர்ந்தாலும் விந்து வெளியேறாது.உடலின் சக்தி விரயம் தடுக்கப்படும்.

சரி இவ்வாறு சாப்பிட்டு கெட்டியான விந்துவை எப்படி இளக்கி வெளியேற்றுவது என்றால் எலுமிச்சம்பழம் சாப்பிட்டு வர விந்து எப்போதும் போல வெளியேறும்.

நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...



 


செவ்வாய், 27 செப்டம்பர், 2022

ஜோதிடம் கால அளவுகள்

 நாம் ஒருவருக்கு ஜோதிடம் பார்க்கும்பொழுது ஜாதககாரரின் பலனை துல்லியமாக கூற வேண்டுமானால் நமக்கு ஜோதிடத்தின் கால அளவுகள் மனப்பாடமாக தெரிந்திருக்க வேண்டும்...


அவ்வளவு முக்கியமான ஜோதிட கால அளவுகளைப்பற்றி தெரிந்து கொள்வோம்...




60நொடி               - ஒரு நிமிடம்

60நிமிடம்             - ஒரு மணி 

24 மணி                - ஒரு நாள்

15 நாள்                  - ஒரு பட்சம்

2பட்சம்                  - ஒரு மாதம் 

2 மாதம்                 - ஒரு ருது 

3ருது                     - ஒரு அயனம் 

2அயனம்              -ஒரு வருடம் 

12 வருடம்              - ஒரு குறுவட்டம் 

30 வருடம்             - ஒரு சனிவட்டம் 

60 வருடம்             - ஒரு சுற்று 

60 தத்பரைகள்     - ஒரு வினாடி 

24 வினாடி             - ஒரு நாழிகை 

2½ நாழிகை          - ஒரு மணி

60 நாழிகை           - ஒரு நாள் 

60 உபவிகலைகள்- ஒரு விகலை 

60 விகலை             - ஒரு கலை 

60 கலைகள்           - ஒரு பாகை 

30 பாகைகள்          - ஒரு ராசி

360 பாகை              - ஒரு சுற்று 

1 நட்சத்திரம்            - 13 பாகை 20 கலை 

1 நட்சத்திர பாதம்    - 3 பாகை 20 கலை


ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் இவற்றை நன்றாக மனனம் செய்து கொள்ளுங்கள்.

நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...


திங்கள், 26 செப்டம்பர், 2022

நிலம்புரண்டி மூலிகையின் மர்மம்

 


நிலம்புரண்டி மூலிகை ஒரு அற்புதமான மற்றும் விசித்திர குணமுள்ள மூலிகை ஆகும்.

நிலம்புரண்டி மனிதர்களை கண்டால் அது வளர்ந்திருக்கும் இடத்திலேயே நிலத்தை கீறிக்கொண்டு மண்ணுக்குள் மறைந்து விடும்.

நிலம்புரண்டி இப்படி மனிதர்கள் கண்ணில் படாமல் மறைவதற்கு காரணம் என்னவென்றால் இந்த நிலம்புரண்டி மூலிகை ஒரு புதையல் காட்டி மூலிகை ஆகும்.

மனிதர்கள் இதனை தவறாக பயன்படுத்தி புதையலை எடுத்து விடுவார்கள் என்ற காரணத்தினால் இந்த நிலம்புரண்டி மூலிகை மனிதர்களை கண்டவுடன் மண்ணில் மறைந்து விடுகின்றது.

இந்த நிலம்புரண்டி மூலிகையை மண்ணுக்குள் மறையாமல் எடுக்க வேண்டும் என்றால் நமது கைகளில் கொஞ்சம் தேத்தான் கொட்டைகளை வைத்துக்கொண்டு தேடினால் இந்த நிலம்புரண்டி மூலிகையை மண்ணுக்குள் மறைய விடாமல் எடுக்கலாம்.

நன்றி அடுத்த பதிவில் சந்திப்போம்...

சனி, 24 செப்டம்பர், 2022

மூலிகைகளுக்கு உயிர் கொடுக்கும் முறை

 நாம் எல்லோருக்குமே மூலிகைகள் என்றால் என்ன என்று தெரிந்திருக்கும்.

உலகில் பலவகையான மூலிகைகள் உள்ளன...

அதுவும் குறிப்பாக இந்தியாவில் மூலிகைகள் அதிகம்.

மூலிகைகள் மருந்திற்கும்,மந்திர தந்திரத்திற்கும்,இன்ன பிற செயல்களை செய்வதற்கு பயன்படுகின்றது.

அப்படிப்பட்ட மகத்துவம் வாய்ந்த மூலிகைகளை நாம் சாதரணமாக பறிக்க கூடாது.

மூலிகையை பறிக்கும் முறை காண்போம்...!

நமக்கு தேவைப்படும் மூலிகைகளை தேவையான சமயத்தில் பறிக்கும் பொழுது அதனை சுற்றி நன்கு சுத்தம் செய்து கன்னி நூல் காப்புக்கட்டி பொங்கலிட்டு தேங்காய் பழம் உடைத்து பூஜை செய்து வேரறாமல் பிடுங்க வேண்டும்.

ஓவ்வொரு மூலிகைகளுக்கு ஓவ்வொரு நாள்கிழமை உண்டு...

முக்கிய குறிப்பு : 

மூலிகைகளை பிடுங்கும் முன்பு  

"ஓம் மூலி சர்வ மூலி 

உன்னுடைய உயிர் 

உன்னுடலில் நிற்க சுவாகா" 








என்ற மந்திரத்தை முப்பத்தியிரண்டு முறை மனதுக்குள் கூறிவிட்டு பிடுங்க வேண்டும்.

வெள்ளி, 23 செப்டம்பர், 2022

பெண்கள் சாமியாடுவதை நிறுத்த

 சிலர் அவர்கள்  வீட்டில் உள்ள பெண்கள் மேல் சாமி வந்து ஆடுவதை பார்த்திருப்பீர்கள்.

இவர்கள் கோவில்களில் மட்டுமல்லாது வீடுகளில் சில நேரம் சாமி வந்தது போல் கத்திக்கொண்டு ஆடுவார்கள்.

சரி இப்போது பெண்கள் சாமி வந்து ஆடுவதை நிறுத்தும் முறையைக்காண்போம்...

கல்லுருவி 

புல்லுருவி

கழுதை மயிர 

மனித தலை மயிர்

இவைகளை ஒன்றாக கருங்கம்பளி கயிற்றில் கட்டி சாமியாடும் பெண்கள் வீட்டில் போய் தெரியாமல் கட்டி விட அவர்கள் மேல் சாமி வந்து ஆட மாட்டார்கள்.

முக்கிய குறிப்பு : சாமியாடும் பெண்கள் வீட்டில் போய் கட்டும் முன்பு அ-இ-உ என்ற மூன்றெழுத்து மந்திரத்தை மூன்று தடவை உச்சரிக்க வேண்டும்...


       மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்



செவ்வாய், 20 செப்டம்பர், 2022

மூதேவி அகல சீதேவி குடியிருக்க

 நாம் எல்லோர் ஊரிலும் ஏதாவது ஒரு மர்மமான இடம் இருக்கும், பெரியவர்கள் அங்கு போகக்கூடாது என்று கூறுவார்கள்.பெரியவங்க சொன்னா கண்டிப்பாக காரணம் இருக்கும், 

அந்த காரணம் என்ன என்று முதலில் பார்ப்போம்.

பேய்,பிசாசு, முனி ,ஜடாமுனி,சங்கிலிமுனி, இரத்தக்காட்டேரி போன்றவைகள் ஆள் நடமாட்டமில்லாத இடம் ,யாரும் நகர்த்த முடியாத இடம்,மற்றும் வனம் போன்ற இடங்களில் குடியிருக்கும்.

இவைகள் அவ்விடத்தில் குடியிருப்பது மட்டுமின்றி அவ்வழி செல்லும் இளகிய மனமுள்ளவர்களை பயமுறுத்தி சந்தோஷமடையும்.

இவைகளை அவ்விடத்தை விட்டு விரட்டுவதோடு அல்லாமல் அதே இடத்தில் சீதேவியை வாசம் செய்ய கீழ்க்காணும் செய்முறையை செய்யுங்கள்.

மாயாஜாலம் 

எருமை மூத்திரம்

ஆட்டு மூத்திரம் 

கழுதை மூத்திரம்

குதிரை மூத்திரம்

நாய் மூத்திரம் 

இவைகளை ஒன்றாய் ஒரு மண்பாண்டத்தில் கலந்து ஆதிவாரம் (ஆதிவாரம் என்பது ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் இவைகள் இருக்குமிடத்தில் தெளித்து விட்டு அந்த மண்பானையை அவ்விடத்தில்  உடைத்து விட வேண்டும்....அவ்வாறு உடைத்த மண்பானையில் நான்கு துண்டுகளை எடுத்து நான்கு திசைகளிலும் புதைத்து வைத்து விட வேண்டும்.

அவ்வாறு புதைத்து வைத்து விட்டு திரும்பி பார்க்காமல் வந்து விட வேண்டும்.

பின்னர் மூன்று நாள் கழித்து அவ்விடம் சென்று

அரைத்த மஞ்சள்

குங்குமம் 

தேங்காய் 

பழம் 

கற்பரம் 

சாம்பிராணி 

வெற்றிலை 

பாக்கு 

செந்தாமரை 

இவைகளை கொண்டு அவ்விடத்தில் தாமரை இதழ்கள் மேல் வைத்து வழக்கம் போல் பூஜை செய்து அவ்விடத்தை மூன்று முறை வலம் வந்து ஆறு முறை தோப்புக்கரணம் இட்டு வணங்கினால் அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்த மூதேவிகள் அகண்டு சீதேவியாகிய லட்சுமி வாசம் செய்வாள்.

பின்குறிப்பு : பூஜையின் போது சொல்ல வேண்டிய வாசகம் (மனதுக்குள்)

என் இருதயக்கமலத்தில் வீற்றிருக்கும் உலகராணி அம்மணி நீ இப்போது எழுந்தருளியிருக்கும் இவ்விடம் லட்சுமி கடாட்சமும் குபேர கடாட்சமும் நீங்காமலிருக்க வேண்டும் தாயே...

 ...மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்... 







திங்கள், 19 செப்டம்பர், 2022

இராஜ வசியம் உண்டாக

 இராஜ வசியம் உண்டாக வேண்டும் என்றால்

ஆனைவணங்கி

நிலப்பனைவேர்

அருகு 

வெள்ளெருக்கு

காஞ்சோரி 

ஆவாரை 

முசுமுசுக்கை 

சுழலாவாரை 

பொற்றாலைகையாந்தகரை 

வேம்பு

போன்றவைகளின் வேரை சம எடையாக எடுத்து காய வைத்து நன்றாக பொடி செய்து தேனில் குழைத்து நெற்றியில் திலகமிட்டு வர இராஜ வசியம் உண்டாகும்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்......

சனி, 17 செப்டம்பர், 2022

சாராய பாட்டில் வெடிக்கும் வித்தை

 நாம் அனைவருக்கும் சாராய பாட்டில் நன்றாக தெரிந்திருக்கும்.


சரி இப்போது சாராய பாட்டில் வெடிக்கும் வித்தையைப்பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்...

மூடியிருக்கும் சாராய பாட்டிலை திறந்து அதற்க்குள் சிறிதளவு கடுகு போட்டு நன்றாக மூடி வைத்து விட வேண்டும்...

சிறிது நேரம் கழித்து அந்த சாராய பாட்டில் வெடித்து சிதறி விடும்...

இதற்க்கு காரணம் சாராயத்திற்க்கும் கடுகுக்கும் கொஞ்சம் கூட ஒத்து வராது... 

நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்

..............................................................................................

செவ்வாய், 13 செப்டம்பர், 2022

பேய் ஓட்டும் வித்தை

 நீங்கள் நிறைய பேரை பார்த்திருக்கலாம் பேய்,பிசாசு,போன்றவைகள் பிடித்து அல்லல்படுவதை...

சிலர் கத்திக்கொண்டே இருப்பர்.சிலர் பேசாமல் மௌனமாக இருப்பர்.

பேய் பிடித்தவர்கள் மட்டும் இன்னலுக்கு ஆளாக மாட்டார்.

பேய் பிடித்தவர் குடும்பத்தினர்களும் பெரும் கஷ்டங்களுக்கு ஆளாகின்றனர்.

இப்போது பேய் ஓட்டும் முறையைக்காண்போம்.

ஒரு வெற்றிலையில் சிறிதளவு அபினை வைத்து சுருட்டி பேய் பிடித்தவர்களுக்கு உள்ளுக்குள் சாப்பிட கொடுக்க வேண்டும்.

அப்பொழுத  அந்தப்பேயானது தான் எந்த ஊர் என்ன பெயர் போன்ற எல்லா விபரங்களையும் கூறிவிடும்.பேயானது எல்லா விபரங்களையும் கூறி முடித்ததும், பேய் பிடித்தவர்  உச்சி முடியில் சிறிதளவு அறுத்து விட எப்பேர்பட்ட பேயும்,பிசாசும் விலகி ஓடி விடும்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...

வெள்ளி, 9 செப்டம்பர், 2022

சிறு அளவைகள்

 நாம் மருந்துக்கு அல்லது வேறு ஏதேனும் உபயோகத்திற்கு மூலப்பொருட்கள் சேர்க்கும்பொழுது மிகச்சிறிய அளவில்தான் சேர்க்க வேண்டும்.

அவ்வாறு சேர்க்க நமக்கு அளவுகள் தெரிய வேண்டும் அல்லவா...

அந்த அளவுகளைப்பற்றி இந்தப்பதிவில் காணலாம் வாருங்கள்.

ஒரு குன்றி எடை - நூற்றி முப்பது மில்லி கிராம்

ஒரு பணவெடை- நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்

ஒரு தோலா - 11.7 கிராம்

மூன்று தோலா- ஒரு பலம்

எட்டு பலம் - ஒரு சேர்

ஒரு பலம் - முப்பத்து ஐந்து கிராம்

ஐம்பது பலம் - ஒரு தூக்கு 

இரண்டு தூக்கு - ஒரு துலூம்

ஒரு வீசை - ஆயிரத்தி நானூறு கிராம் 

ஒரு விராகன் - நான்கு கிராம்

பத்து விராகன் எடை - ஒரு பலம்

இரண்டு குன்றாமணி எடை - ஒரு உளுந்து எடை

மூன்றே முக்கால் குன்றிமணி எடை - ஒரு பணவெடை


      மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...







புதன், 7 செப்டம்பர், 2022

கருங்காலி மரம் தகவல்கள்

 அதிசயம்,அபூர்வம்,ஆச்சரியம்,அமானுஷ்யம் போன்றவைகளை உள்ளடக்கிய ஒரு மரம் தான் கருங்காலி மரம்.

கருங்காலி மரத்தின் சிறப்பு என்னவென்றால் இதனுடைய சக்தி ஒரு கிலோமீட்டர் சுற்றளவு பரவியிருக்கும்.அவ்வளவு ஆற்றல் கொண்டது கருங்காலி மரம்.

கருங்காலி மரத்திற்கு மின் காந்த ஆற்றல்களை சேமித்து வைக்கும் சக்தி அதிகம்.

கருங்காலி மரம் இருக்கும் இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு மின் காந்த ஆற்றலை சேமிப்பதால்தான் கோவில் கும்பாபிஷேகத்தின்போது கலசங்களில் இதன் குச்சிகளை போட்டு வைப்பது வழக்கம்.

கருங்காலி மரத்திற்கு துஷ்ட சக்தி மற்றும் துர் ஆத்மாக்களிடம் இருந்து காக்கும் சக்தியும் அதிகம்.

கருங்காலி மரம் செவ்வாய் கிரகத்தின் நற்குணங்களை உள்ளடக்கி வளரும் தன்மை உடையது.

கருங்காலி மரத்தின் கீழே அமரும்போதும் உடலில் உள்ள சில நோய்கள் தீரும்.

கருங்காலி மரத்தின் பாகங்கள் மருத்துவத்திற்கும் பயன்படுகின்றது.

கருங்காலி மரத்தினால் செய்யப்பட்ட பொருட்களை வீட்டில் வைப்பது நன்மையாகும்.


கருங்காலி மரம் இருக்கும் இடத்தில்

தெய்வீக சக்தி அதிகரிக்கும் 

கண் திருஷ்டி நீங்கும்

காரியத்தடை அகலும்

தீய சக்தி விலகும்....











செவ்வாய், 6 செப்டம்பர், 2022

பூனையை எலி விரட்டும் வித்தை

 பெரும்பாலும் பூனைதான் எலியை விரட்டிப்பிடித்து சாப்பிடும்,இது உங்க எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான்.

ஆனால் அந்தப்பூனை எலியைக்கண்டு பயந்து ஓடி ஸ்தம்பித்து நிற்க வேண்டுமா....?

ஒரு எலியைப்பிடித்து அதன் மேல் கொஞ்சம் எருக்கம்பாலையும்,கொஞ்சம் குப்பைமேனிச்சாறையும் தடவி பூனை எதிரில் விட்டு பாருங்கள்.அந்தப்பூனை எலியை முகர்ந்து பார்த்துவிட்டு பயந்து திக்கற்று நின்று விடும்....

எச்சரிக்கை ....

இதை அடிக்கடி செய்யாதீர்கள்

திங்கள், 5 செப்டம்பர், 2022

ராவணனின் கடைசி வார்த்தைகள்

 ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த ராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது. 


அப்போது ராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன் ராஜதந்திரம் மிக்கவன். நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும். நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா என்று கூறி அனுப்பினார். 


லட்சுமணன் பவ்யமாக ராவணனின் காலடியில் நின்று இலங்கேஸ்வரா உன்னுடைய ஞானம் உன்னோடு அழிந்துவிடக்கூடாது. நீ எனக்கு உபதேசிப்பதன் மூலம் அதை இந்த உலகம் அறிந்து பயன் பெறும் எனவே எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான். 


லட்சுமணனை சிரித்துக் கொண்டே வரவேற்ற ராவணன், ராமர் தன்னிடத்தில் வைத்திருக்கும் மதிப்பு அறிந்து மகிழ்வுடன் தன் அறிவுரைகளைச் சொன்னான். 


லட்சுமணா ஒரு காலத்தில் சர்வ வல்லமை படைத்தவனாக நான் இருந்தேன். நவக்கிரகங்களும் எமனும் இந்திரனும் கூட எனக்குக் கீழ்ப்படிந்தனர். அப்போது நான் எண்ணியது என்ன தெரியுமா? 


நாட்டில் அனைவரும் சொர்க்கம் செல்ல வேண்டும். நரகம் யாருக்கும் இல்லையென உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஒரு பறக்கும் ஏணி அனைவரையும் ஏற்றிச் செல்ல எமனைக் கொண்டே உருவாக்கப்பட வேண்டும் என்பதே. 


ஆனால் இந்த நல்ல எண்ணத்தைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போட்டேன். அதன் விளைவாகவே இன்று நான் அவதிப்பட்டேன். 


சூர்ப்பனகை வந்து சீதாதேவி அழகின் சிகரம். அவள் உனக்கு ஏற்றவள் என்று கூறியதும் உடனே அந்தச் செயலை தள்ளிப் போடாமல் புறப்பட்டேன். விளைவு அனைவருக்கும் நாசம். 


அதனால் நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது.


1. நல்ல செயலை உடனடியாக செய்து முடி அது பலன் தரும்.


2. தீய செயலைத் தள்ளிப் போடு தள்ளிப்போடுவதால் அந்த தீய செயல் நடைபெறாமல் இருக்க வாய்ப்புண்டு.


3. உன் சாரதியிடமோ வாயிற்காப்போனிடமோ சகோதரனிடமோ பகை கொள்ளாதே உடனிருந்தே கொல்வார்கள்.


4. தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் எப்போதும் வெல்வோம் என்று எண்ணாதே.


5. உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.


6. நான் அனுமனை சிறியவன் என்று எடை போட்டது போல் எதிரியை எப்போதும் எளியவன் என்று எடைபோட்டுவிடாதே.


7. வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என்று நம்பாதே. அவை நம் வழிகாட்டிகள்.


8. பொறுமையைவிட மேலான தவமுமில்லை.


9. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.


10. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.


11. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை என்று சொல்லி முடித்தான் ராவணன்.


லட்சுமணன் ராவணனை வணங்கி உபதேசங்களை பெற்றுக் கொண்டான்.

எருக்கஞ்செடி

பொதுவாக

எருக்கஞ்செடி என்று சொன்னாலே அனைவருக்கும் ஒரு சிறிய பயம் வந்துவிடும்.

ஏனென்றால் எருக்கன் செடிகள் சுடுகாட்டில் அதிகமாக வளர்ந்து இருக்கும்.

அதில் தீயசக்தி இருக்கும் என்று நம் அனைவராலும் நம்பப்படுகிறது.

அது உண்மைதான்.

எருக்கன் செடியில் நல்ல சக்தியானது இருக்கின்றது என்பது எவ்வளவு உண்மையோ, அந்த அளவிற்கு கெட்ட சக்தியும் வந்து தங்கும் என்பது உண்மை. இதன்படி எருக்கன் செடி எந்த இடத்தில் இருக்கின்றதோ அதை வைத்துதான் அதில் நல்ல சக்தி இருக்கிறதா?

கெட்ட சக்தி இருக்கிறதா? என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடியும்.

பொதுவாகவே எருக்கன் செடியில் வெள்ளை எருக்கன் செடியை தேவ மூலிகை என்று கூறப்படுகிறது.

அதாவது புதையல், தங்கச் சிலைகள், ரத்தினங்கள், இவையெல்லாம் பதுங்கியிருக்கும் அல்லது புதைந்துருக்கும் இடத்தில் இந்த வெள்ளருக்கன் செடி வளரும் என்று பழங்கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி பார்த்தோமேயானால் எருக்கம் செடி இருக்கும் இடத்தில் நிச்சயமாக தெய்வசக்தி இருக்கும் என்பது அர்த்தம். அதேசமயம் இந்தப் புதையலை பாதுகாக்க அந்த எருக்கன் செடி ஓரம் பாம்புகள் இருக்கும் என்றும் சிலரால் கூறப்படுகிறது.

அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை

எனக்கு தெரிந்த வரை

தெய்வீக மூலிகையான வெள்ளை எருக்கன் மூலிகையை தேவையில்லாமல் யாரும் தொட்டு அதன் புனித தன்மை கெட்டுவிடக்கூடாது என்பதற்காக

அதன் வேரில் வெள்ளை நாகம் இருக்கும் என்றும்

அந்த நாகம் தான் அந்த மூலிகையை காக்கும் என்றும் பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள்

அப்போது தான் சிறுபிள்ளைகள் மாதவிடாய் பெண்கள் அந்த மூலிகை அருகில் செல்ல மாட்டார்கள் இதனால் அந்த மூலிகையின் புனித தன்மை கெடாமல் இருக்கும் என்று என் குருநாதராக என் பாட்டான் எனக்கு கூறிய செய்தி.

மேலும்

இந்த வெள்ளை எருக்கன் மூலிகையை எப்படி எடுக்க வேண்டும்.?

அதனால் நமக்கு என்ன பயன் என்பதை எழுதுகிறேன்.

இந்த இருக்கும் இடத்தில் சுத்தம் செய்து

பசுவின் கோமியம் வேரை சுற்றிலும் தெளித்து விட்டு

பூச நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி அன்று ஞாயிற்று கிழமையாக இருக்க வேண்டும்.

அன்றைய தினத்தில் கற்றாழை நூல் (கன்னி நூல் ) காப்பு அதாவது கற்றாழை நூலில் கஸ்தூரி மஞ்சளை தாலி போன்று கட்டி அதை வெள்ளை எருக்கன் வேரில் மூன்று சுற்று சுற்றி கட்டிய பின்

சாப நிவர்த்தி செய்த பிறகு பிரண பிரதிஷ்டை செய்து


சர்க்கரை பொங்கல் படையல் செய்து

வசிய, அல்லது மோகன மந்திரங்கள் செபித்த பிறகு

அஷ்ட கர்ம மந்திரங்கள் ஒவ்வொன்றும் 108உரு செபித்து முடித்த பிறகு

மூலிகை செடியின் வேர் பகுதியில் இருக்கும் மண்ணை அள்ளி ஆணி வேர் அறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நன்றாக முற்றிய செடியாக இருந்தால் நல்லது

இதில் வடக்கு திசையில் ஓடும் வேர்களை தனியாக எடுத்து தாயத்தில் போட்டு குழந்தைகளுக்கு கட்டினால்

காத்து கருப்பு, பாலகிரக தோஷம், சந்து தோஷம், பட்ஷி தோஷம், குளிதோஷம் என அனைத்து தோஷங்களும் விலகும்.


வெள்ளை எருக்கன் அடிகட்டையில் விநாயகர் பொம்மை செய்து

அதை பூஜையில் வைத்து தினம் ஏதாவது ஒரு கணபதி மந்திரம் செபித்து வந்தால்

வீட்டில் ஐஸ்வர்யங்கள்  உண்டாகும்,


அதே கட்டையில் பலகை அறுத்து அதில் சிதம்பர சக்கரம் வரைந்து பூஜை செய்து வந்தால்

இந்த உலகத்தில் ஆகாத காரீயம் என்று எதுவுமே இருக்காது

வசிய சக்கரம் செய்து பூஜித்து வந்தாலும் 

சர்வ வசியமும் லட்சுமி கடாஷமும் உண்டாகும்


இந்த செடியின் நாரை உரித்து காய வைத்து

நாரை கயிராக திரித்து சகல தோஷ நிவர்த்தி மந்திரங்கள் செபித்த படி 

21முடி போட்டு குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கட்டலாம்.


இதன் இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து

இதனோடு வெள்ளை எலி கரு சேர்த்து அரைத்து

சுத்தமான வெள்ளை பருத்தி துணியில் பூசி அதை திரியாக உருட்டி

மண் அகலில் போட்டு

வெளவால் நெய் ஊற்றி விளக்கேற்றி

தீபம் எரியும் போது

தேங்காய் ஓட்டில் தீபத்தின் மேல் காட்ட தேங்காய் ஓட்டில் கரி பிடிக்கும் அதை சேகரித்து எடுத்து ஒரு புது சட்டியில் போட்டு காட்டில் வாழும் ஆலாக்குருவி முட்டையை உடைத்து சுற்றிலும் தடவி காயவைக்க மை திரண்டு வரும் அதை வழித்து

செப்பு சிமிழில் அடைத்து பூஜையில் வைத்து 

ஆஞ்சநேயர் மந்திரத்தை 1008உரு கொடுத்தால்

மை உயிர் பெரும்.

இதை வெற்றிலையில் தடவி பார்த்தால்

உலகத்தில் நடக்கும் அனைத்தும் தெரியும்.

உடனே ஆலாகுருவியை தேட தோணுமே மனசு.....!!

தேடுங்கள்

தகுந்த குருவின் மூலம் உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் கிடைக்கும்

நன்றி.

காய்கறிகள் குறள்


*"தக்காளி எப்போதும் உட்கொண்டால் தரணியில் எக்காலும் நோயில்லை காண்."*


   🍅🌰🥑🥝🍈🍇🥦


*"எலுமிச்சை புளித்தாலும் எடுத்ததை உட்கொள்வீர் எலும்புக்கு வலு சேர்க்குமே."*


      🍓🍒🥑🥝🥥🥦🌶


*"வெங்காயம் இல்லாச் சாம்பார் எஞ்ஞான்றும் தங்காதே நாவில் ருசி."*


     🍅🥒🍄🌶🥒🥥🍉


*"பொல்லாத பேரையும் நல்லவ ராக்குமே புடலங்காய் போற்றிச் சுவை."*

     

    🍄🌶🍊🍉🥥🥦


*"தள்ளாத வயதிலும் உள்ளே தள்ளுவாய் முள்ளங்கி மூன்றினைத்தான்."*


   🍄🥦🥒🍏🍍🥕🌶


*"வெண்டைக்காய் இருக்கையில் சுண்டை எந்நாளும் தொண்டையில் இறங்காது காண்."*


       🍄🥑🍉🍈🍇🌶


*"வள்ளிக் கிழங்குண்ணார் வையத்தில் வாழ்ந்தும் வாழாதார் என்பது வழக்கு."*


    🍅🍌🍄🥒🌶🍎


*"கத்தரி உண்பாரே உண்பார் மற்றெல்லாம் இத்தரையில பித்தருக்குச் சமமெனக்கொள்."*


      🌽🌰🍄🥝🥥🍈🍇


*"பூசணியைச் சேர்த்தாரே புண்ணியர் பூவுலகில் புகழோடு வாழ்வார் அவர்."*


  🍅🍌🍋🍊🍉🥝🥦


*:காய்கறியைத் தின்னாதார் வாழ்க்கை எப்போதும் நோய்நொடியில் வீழ்ந்து கெடும்."*


     🥥🍈🍉🍄🥦🥒🌶


*"முருங்கைக்காய் ருசித்தாரே ருசித்தார் மற்றோரெல்லாம் வெறுங்கையில் முழம் போடுவர்."*


     🍑🍅🌰🥝🥥🍉🍌


*"காரிருளில் கண்தெரிய வேண்டுமெனில் பாரிலுள்ள கரிசலாங் கண்ணியைச் சேர்."*


     🌽🍍🍊🍉🥝🥒🥦


*"இரும்பைப் போல் இதயமது வேண்டுமெனில் கரும்பைப் போய் விரும்பிச்சுவை."*


   🌰🥔🍒🍑🍐🍏🥦


*"உரிக்க உரிக்கத் தோல்தான் வெங்காயம் என்றாலும் செரிக்குமோ உண்ணவிடில்."*


   🥔🍓🍐🥥🍎🍍🥦


*"பறித்தவுடன் உண்ணுவீர் பரங்கியை எப்போதும் பலனது வேண்டுமெனில்."*


      🍅🍋🍌🍍🍆🥦🥒


*"பாகற்காய் கசக்கும் என்பதால் சீண்டாதார் சோகத்தில் சேர்ந்து விழும்."*


       🍊🍉🥥🥝🥒🌶


*"வெல்லத்தில் இரும்புண்டு ஆகையினால் சாப்பாட்டில் ஒருதுண்டு சேர்த்துச்சமை"*


    🍍🍐🍓🍇🥦🥒


*"வாழ்வதனால் ஆய பயனென்கொல் வாழைக்காய் தாழ்வேனெவே எண்ணு பவர்."*


       🍓🥦🌶🥥🍏🍉


*"கேரட்டைச் சேர்க்காத சமையல் கிணற்றுக்குள் தேரை வாழ்ந்த கதை"*


       🍋🍊🍉🍈🍆🍄


*"பீடுநடை போடுதல் வேண்டுமெனின் தினமும் பீட்ரூட்டை உணவில் சமை."*


      🍑🍐🍎🌽🥕🌶


*"கொத்தவரை பீன்ஸ் முட்டைகோஸ் இவையெல்லாம் சத்தே எனவே சரியாய் உணர்."*


       🍅🍍🍉🍈🍇🥦


*"கறிவேப்பிலை மல்லி கடுகு சேராதோர் சொறி பிடித்தோடுவார் காண்."*


       🥕🍒🍑🍐🍏


*"பொன்னிற மேனி வேண்டுமெனில் நீ அந்த பொன்னாங் கண்ணியைச் சேர்."*


         🍉🍒🍋🍌🍍🥑


*"கண் இருந்தும் குருடரே காசினியில் காய்கறியை உண்ணாதவர்."*


     🙏🍄🥔🍒🍊🍏🥦🙏

அரிசி வேகாமல் போகும் வித்தை

 நாம் எல்லோரும் வீட்டில் சோறு சமைத்து உன்போம்.

அவ்வாறு சமைக்கும் சாதம் வேகாமல் போக வேண்டுமென்றால் சிறிதளவு கஞ்சா விதையை உலையில் போட்டால் அரிசி எவ்வளவு நேரம் வேக வைத்தாலும் வேகாது....நாம் உலையில் போட்ட அரிசி வேக வேண்டும் என்றால் வேறு தண்ணீர் மாற்றிவிட்டு சமைக்க வேண்டும் 

ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

யாருக்கும் தெரியாமல் எழுதுவது

 நாம் எதையாவது யாருக்கும் தெரியாமல் எழுதி வைக்க வேண்டுமானால்...

முதலில் சிறிதளவு படிகாரத்தை எடுத்து நன்கு தூளாக்கி(மாவு போல) அதை தண்ணீரில் கரைத்து எழுத வேண்டும்.  

இவ்வாறு எழுதினால் யாருக்கும் தெரியாது.

நீங்கள் எழுதியை படிக்க வேண்டுமானால் எழுதிய பேப்பரை வெயிலில் வைத்து பார்க்க நீங்கள் எழுதியது கருப்பாக தெரியும்.


தீப்புண்கள் ஆற


தீப்புண் ஆற வேப்பம் கொழுந்தை பசுமோர் விட்டு அரைத்து தீப்பட்ட புண்மீது பூச புண் ஆறும்.


குப்பைமேனி இலை சாறு சமஅளவு தேன் கலந்து சேர்த்து புண் மேல் தடவி வர தீப்புண் குணமாகும்


வேப்பம் பட்டையை இடித்து கசாயமாக காய்ச்சி ஆறிய பிறகு பாட்டிலில் வைத்து குலுக்கி திப்புண் வடுமீது தடவி வர குணமாகும்.


புளிய மரத்து சொற சொறப்பு பட்டையை பட்டுபோல் பொடி செய்து புண் மேல் தூவி தேங்காய் எண்ணெய் விட்டு வர ஒரு வாரத்தில் புண் ஆறிவிடும்.


அத்திபால் தடவ தீப்புண் ஆறும்.


உடலில் தீக்காயம் ஏற்பட்டால் 30 மில்லி தேங்காய் எண்ணையுடன், 50 மில்லி சுண்ணாம்பில் ஊற்றிய தெளிந்த நீரை கலந்து தீப்புண் மீது தடவி வர குணமாகும்.


வேப்பங்கொழுந்தை மோர்விட்டு அரைத்து தீப்பட்ட புண் மீது தடவ புண் குணமாகும்.


வீட்டில் உள்ள காப்பி டிக்காஷனை தீப்புண் உள்ள இடத்தில் தடவி வர இப்புண் காயம் விரைவில் ஆறும்.


மருக்கொழுந்து செடியினைப் பறித்து வேரை நீக்கி விட்டு சுத்தம் செய்து நல்லெண்ணெய் கலந்து வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொண்டு தீப்புண் மீது தடவி வர குணமாகும்.


உடலில் தீக்காயங்கள் ஏற்ப்பட்டால் தேங்காய் எண்ணெய் தீப்புண் மீது தடவி வந்தால் தீப்புண் ஆறும்.


செம்பருத்தி இலை, பூ ஆகியவற்றை சேர்த்து அரைத்து தீப்பட்ட புண்ணின் மீது பூசி வந்தால் தீப்பட்ட புண்ணில் ஏற்படும் எரிச்சல், காந்தல் குறையும்….


வேப்பங்கொழுந்து, ஆமணக்கு இலை இரண்டையும் அரைத்து தீப்புண்ணில் வைத்து தினமும் கட்டி வர தீப்புண் ஆறும்

யட்சிணி வசியம்

 நமது நாட்டின் சித்தர்கள் பலர் தங்களின் பல ஆண்டு தவங்களின் மூலம் மனிதர்களுக்கு உதவும் பல அறிய கலைகளை கண்டுபிடித்தனர். அவற்றில் ஒன்று தான் மா...

மாயாஜாலம் தளத்தில் பிரபலமான பதிவுகள்