சனி, 13 மே, 2023

யட்சிணி வசியம்

 நமது நாட்டின் சித்தர்கள் பலர் தங்களின் பல ஆண்டு தவங்களின் மூலம் மனிதர்களுக்கு உதவும் பல அறிய கலைகளை கண்டுபிடித்தனர். அவற்றில் ஒன்று தான் மாந்திரீக கலை. இதில் “யட்சிணி தேவதை வசிய மந்திரம்” மிகவும் பிரபலமானது. நாம் விரும்பும் பல விடயங்களை வழங்க வல்லது. இந்த யட்சிணி தேவதை வசிய மந்திரம் உபாசனை முறைகளை தெரிந்து கொள்வோம்.


யட்சிணி மந்திரம் – காலை

“ஹரி ஓம் ஸ்ரீம் றியும் சர்வலோக மோகினி வா வா  ஐயும் க்லீம் சிவசிவ மோகினிநசி நசி மசி மசிசுவாகா“


யட்சிணி மந்திரம் – மாலை

”ஓம் ஸ்ரீம் க்லீம் சர்வயட்சிணி ஆகர்சணி சௌம் க்லீம் ஓம்

மோகினியட்சணி யஷ குல நாயகி மமவசம் குருகுரு சுவாகா


இந்த யட்சிணி மந்திரத்தை உபாசனை செய்வதற்கு சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். முதலில் சொந்த வீடு உள்ளவர்கள் அவர்கள் வீட்டின் பூஜையறையில் இந்த மந்திர உபாசனை செய்ய வேண்டும். 


வாடகை வீட்டிலிருப்பவர்கள் யட்சணி உபாசனையில் ஈடுபட்டு அதில் சித்தி ஏற்பட்டால், மந்திர சித்தியின் பாதி சக்தி அந்த நிலம் அல்லது வீட்டின் உரிமையாளருக்கு சென்று விடும். 


உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு நீங்கள் யட்சிணி மந்திர உபாசனை செய்வதை பற்றியோ அல்லது அந்த மந்திரத்தையோ சொல்லக்கூடாது. 


இந்த உபாசனை செய்யும் காலத்தில் போதை வஸ்துக்கள், பெண்கள் தொடர்பு, மாமிச உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்ல பலனை தரும். இம்மந்திரத்தை உங்கள் பூஜையறையில் உபாசிக்கும் போது இறந்து போன உங்கள் முன்னோர்களின் எந்த ஒரு புகைப்படங்களும் இருக்க கூடாது.


யட்சிணி உபாசனையை ஒரு முழு பௌர்ணமி தினத்தன்றே தொடங்க வேண்டும். அன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து, உங்கள் குலதெய்வத்தை வணங்க வேண்டும். 


உங்கள் பூஜையறையில் நெய்தீபங்கள் ஏற்றி, பழங்கள், பூக்கள் மற்றும் ஏதேனும் ஒரு உணவு பண்டத்தை படையல் வைத்து, பலா மரம் அல்லது வில்வ மர பீடத்தில் ஒரு வெள்ளை துணி பரப்பி, அதில் கிழக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு தியான நிலையில் இம்மந்திரத்தை 1008 எண்ணிக்கையில் உரு ஜெபிக்க வேண்டும். மாலை வேளையில் மேற்சொன்ன முறையில் மேற்கு திசையை நோக்கி அமர்ந்தவாறு மந்திர உரு ஜெபிக்க வேண்டும்.


இந்த யட்சிணி மந்திர ஆளுக்கு ஏற்றார் போல் சித்தியாகும். சிலருக்கு 48 நாள் அதாவது ஒரு மண்டலத்திலேயே சித்திக்கும். சிலருக்கு மூன்று மண்டல காலம் கூட ஆகலாம். இந்த மந்திரம் சித்தி ஏற்பட்டவுடன் உங்களுக்கு சில நன்மையான பலன்கள் ஏற்படுவதை அனுபவத்தில் உணரலாம். 


எதிர்காலத்தில் நடக்கக்கூடிய சில விடயங்களை உங்களால் இப்போதே கூற முடியும். பிறருக்கு நன்மை ஏற்படக்கூடிய சில விடயங்களையும் செய்யலாம். மந்திரம் சித்தியானவர்கள் வாழ்நாள் முழுவதும் யட்சிணி பூஜையை மேற்கொள்ள வேண்டும்.


இம்மந்திர உபாசனையை எக்காரணம் கொண்டும் பிறருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் செய்யக்கூடாது. அப்படி செய்யும் பட்சத்தில் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பாவீர்கள்.


யட்சிணிகளில் நிறைய வகை உண்டு. சில மந்திரவாதிகள் யட்சிணி வசியம் சொல்லித்தருகிறேன் என்றெல்லாம் சொல்வார்கள். சரியாக தெரியாமல் அதில் இறங்க கூடாது யட்சிணி வசியம் தெரிந்து கொண்டு அதை அரை குறையாகவும் கட்டுப்பாடுகள் இல்லாமலும் செய்தால் மிகுந்த ஆபத்து ஏற்படும் மன நலன் கூட பாதிக்கப்படும்.


1)   தனதா ரதிப்ரியா யக்ஷினி. மூல மந்திரம்:


"ஓம் ரம் ரம் ஸ்ரீம் ஹ்ரீம் தம் தனதே ரதிப்ரியே ஸ்வாஹா//"  


(2)      கனகவதி யக்ஷினி. மூல மந்திரம்:


ஓம் ஆகச்ச கனஹவதி ஸ்வாஹா//"

(3)  சிஞ்சி பிசாசினி யக்ஷினி. மூல மந்திரம்:


ஓம் க்ரிம் சிஞ்சி பிசாசினி ஸ்வாஹா//" 


(4)  சந்திரிகா யக்ஷினி. மூல மந்திரம்:


ஓம்ஹ்ரீம் சந்திரிகே ஹம்ஷ க்லீம் ஸ்வாஹா//" 


(5) அணுராகினி யக்ஷினி. மூல மந்திரம்:


ஓம் ஹிரீம் அணுராகினி மைதுணப்ரியே ஸ்வாஹா//" 


(6)   ஸ்வர்ணரேகா யக்ஷினி. மூல மந்திரம்:


ஓம் சகம் சகம் சால்மல ஸ்வர்ணரேகா ஸ்வாஹா//" 

(7)  கர்ணபிசாஸிணி யக்ஷினி. மூல மந்திரம்:


ஓம்ஹ்ரீம் ச: ச: கம்பலகே கத்வா

பிண்டம் ப்சாசிகே ஸ்வாஹா//" 

(8)  வட யக்ஷினி. மூல மந்திரம்:


ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் வடவாஸிணியஷகுலப்ரஷாதே

வடயக்ஷினி. யேஹ்யேஹி ஸ்வாஹா//"

(9)   பத்மாவதி யக்ஷினி.மூல மந்திரம்:


ஓம் நமோ பஹவதி தரணீந்ரா பத்மாவதி

ஆகச்ச ஆகச்ச கார்யம் குரு குரு யம்ப்ராத்தயே

தம் சீக்ரமேவ தேஹி நாஅகச்சேத்து பரசுநாதஸ்ய

க்ருபாஜ்ஞ்யாஸத்யமேவ குரு குரு  ஸ்வாஹா//" 


(10)  பண்டார பூர்ணா யக்ஷினி. மூல மந்திரம்:


ஓம்  ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் பவாமே நம ஸ்வாஹா//" 

தம் சீக்ரமேவ தேஹி நாஅகச்சேத்து பரசுநாதஸ்ய

க்ருபாஜ்ஞ்யாஸத்யமேவ குரு குரு  ஸ்வாஹா//" 


வெள்ளி, 13 ஜனவரி, 2023

அதிக சாதம் உண்ணும் வித்தை

 அனைவருக்கும் வணக்கம்...

இது உங்கள் அரிய தகவல்கள் சேனல்.


இப்போது நாம் காணப்போகும் வித்தை அதிக சாதம் சாப்பிடுவது எப்படி என்பது.


அதற்கு முன் நம்முடைய சேனலை கண்டிப்பாக சப்ஸ்கிரைப் பண்ணுங்க...

பல அரிய தகவல்கள் மற்றும் வித்தைகள்  தெரிந்துகொள்ளலாம். 


சரி வாங்க அதிக சாப்பாடு சாப்பிடும் வித்தையை தெரிந்து கொள்ளலாம்.


இது ஒரு எளிதாக கிடைக்க கூடிய மூலிகையை வைத்து செய்யும் எளிய முறைதான் என்றாலும்கூட நிறைய பேருக்கு தெரியாது.


தேவையான மூலிகைகளின் வேர்


1,குப்பைமேனி வேர் 

2,சிறுகண்பீளை வேர் 


இரண்டு வேர்களையும் சிறிதளவு சமமாக எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்றுவிட்டு தாடையில் ஒதுக்கி விட்டு கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டு சாப்பிட எவ்வளவு சாதமானாலும் சாப்பிடலாம்.பசி மிகுதியாயிருக்கும்.


இன்னொரு முறை இருக்கின்றது,அது ஆபத்து நிறைந்தது.அது பற்றிய தகவல் இப்போது வேண்டாம்.பின்னர் பார்க்கலாம்.


நன்றி...

சப்ஸ்கிரைப் பண்ணுங்க 

லைக் பண்ணுங்க 

கமெண்ட் பண்ணுங்க 

சேர் பண்ணுங்க 

அரிய தகவல்கள்.


அரிய தகவல்கள் தொடரும்...

மறக்காமல் நம்முடைய சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க...

சேனல் லிங்க்

கோழி முட்டை தானாக சுழலும் வித்தை

 வணக்கம் இது உங்கள் அரிய தகவல்கள் சேனல்.


நம்முடைய அரிய தகவல்கள் யூடியூப்  சேனலில் பல அரிய தகவல்கள் தொடர்ந்து வெளிவரும்.


எதையும் மிஸ் பண்ணாமல் பார்க்க உடனே சப்ஸ்கிரைப் பண்ணுங்க...


இப்போது ஒரு கோழி முட்டையை தானாக எப்படி உருள வைப்பது என்ற வித்தையைப்பற்றி  காணலாம்.


கோழி முட்டையை தானாக உருள வைக்கும் வித்தையை செய்ய தேவையானவை : 


1,வெள்ளைக்குண்டுமணி செடியின் வடக்கு பார்த்து போகும் வேர்

2,வெள்ளை மாடப்புறா பிச்சு

3,பொன்னரிதாரம்

4,பாவட்டையிலை

ஆகியவற்றை சமமாக எடுத்துக்கொண்டு  நன்றாக அரைக்கவும்.


 ஒரு முட்டையை எடுத்து அதன் மீது சுற்றிலும் அரைத்த கலவையை நன்றாக பூசி விட்டு கூட்டத்தினர் முன் இந்த முட்டையை கீழே வைத்தால் உருண்டு கொண்டே வரும்.அனைவரும் ஆச்சரியப்படுவார்கள்.


அரிய தகவல்கள் தொடரும்...

கொடிய மிருகங்களை நிலைதடுமாறி சுருண்டு மாண்டு போகும் வித்தை

 


அனைவருக்கும் எச்சரிக்கை...

கவனம் தேவை

கவனம் தேவை 

கவனம் தேவை 


மூலிகையின் படம் வீடியோ கடைசியில் இணைக்கப்பட்டுள்ளது.


நாம் இந்த வீடியோவில் காணப்போகும் ஓடுவன் மூலிகையை கையாளும் முன் இந்த மூலிகையைப்பற்றி நன்கு அறிந்தவர்களிடம் விபரம் கேட்டு அதன் பின்னர் இந்த ஓடுவன் மூலிகையை பயன்படுத்தவும்.


ஓடுவன் என்கின்ற ஒட்டந்தழை மூலிகை மிகவும் ஆபத்தான ஒரு மூலிகையாகும்.கவனமாக பயன்படுத்த வேண்டும்.அஜாக்கிரதையாக பயன்படுத்தினால் உயிர் போய்விடும்.


சித்த மருத்துவத்தில் இந்த ஓடுவன் 

மூலிகையை மனித உடலின் வெளிப்புற மருத்துவத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.அது பற்றிய விபரக்குறிப்பு கிடைத்ததும் விரிவாக வேறு ஒரு வீடியோ பதிவிடப்படும்.


இப்போது இந்த ஓடுவன் மூலிகையை வைத்து கொடிய மிருகங்களை எப்படி நம்மை தாக்காமல் மிரண்டு ஓட வைப்பது என்கிற வித்தையை காணலாம்.


பிரதமை திதியில் அதிகாலை வேளையில் இந்த ஓடுவன் மூலிகைக்கு காப்புக்கட்டி,மூலிகை சாப நிவர்த்தி மந்திரம் கூறி பூஜையை வழக்கம்போல் முறையாக செய்து விட்டு வந்து விடவேண்டும்.


பூஜையின் போது கூற வேண்டிய மந்திரம் : 


"ஹரிஓம் சிவயநம சவ்வும் ஸ்ரீயும் ஹரிஓம் சுவாகா" 

இந்த மந்திரத்தை 1008 தடவை ஜபிக்க வேண்டும்.


பின்னர் மறுநாள் மதியம் சென்று இந்த ஓடுவன் மூலிகையின் வடக்கு பார்த்து போகும் வேரை வெட்டிக்கொண்டு வந்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து வைத்து கொள்ளவும்.


ஓடுவன் மூலிகையின் இந்த அரைத்த விழுதை நாம் காட்டுக்கு எப்போதாவது நம்முடைய தேவைக்கு செல்லும் போது கொடிய மிருகங்கள் நம்மை தாக்க வந்தால் அந்த மிருகத்தின் மேல் அதன் பெயரை சொல்லி இந்த விழுதை கொஞ்சம் எடுத்து எறிந்தால் அந்த கொடிய மிருகம் அந்த இடத்திலேயே நிலைதடுமாறி சுருண்டு மாண்டு போகும்.


மீண்டும் ஒரு முறை கண்டிப்புடன் கூறுகிறேன்,இந்த மூலிகையை பயன்படுத்தும்போது மிகுந்த கவனத்துடன் ஜாக்கிரதையாக கையாளவும்.


மூலிகையின் படம் யூடியூப் வீடியோவில் உள்ளது, பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 


அரிய தகவல்கள் தொடரும்...கொடிய மிருகங்களை கொல்லும் மூலிகை

ஞாயிறு, 4 டிசம்பர், 2022

மந்திர விபூதி நீங்களே செய்யலாம்

 அனைத்து காரியங்களும் வெற்றியாக...

நாம் நினைத்த காரியங்கள் ஜெயமாக...

அதி அற்புதமான மந்திர சக்தி கொண்ட விபூதியை நாம் எல்லோருமே எப்படி சொந்தமாக தயாரிக்கலாம் என விரிவாக தெரிந்து கொள்வோம்.




தேவையான பொருட்கள் : 

1,வில்வ இலை

2,கண்டங்கத்திரி இலை

3,தும்பை இலை

4,கரு ஊமத்தன் இலை

5,கொன்றைமலர் 

6,ஆலமர இலை

7,அரசமர இலை

8,கற்பூர வில்வம்

9,மகா வில்வம்

10, தர்ப்பைப்புல் 


இவை அனைத்தையும் சமமாக எடுத்துக்கொண்டு உங்களுக்கு எவ்வளவு விபூதி தேவைப்படுகின்றதோ அந்த அளவிற்கு பசுஞ்சாணத்தில் 

கலந்து வரட்டியாக  தட்டி ஒரு வாரம் நன்றாக வெயிலில் காய வைத்து புது சட்டி வாங்கி  அதில் அனைத்தும் போட்டு எரித்து சாம்பலை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். இதனுடன் கீழ்க்கண்ட பொருட்களை சேர்த்துக்கொள்ளவும்.


தேவையான பொருட்கள் : 

ஜவ்வாது

பச்சைக் கற்பூரம்

குங்குமப்பூ

ஏலக்காய்

கிராம்பு

ஜாதிபத்திரி

சுத்தமான புனுகு

சுத்தமான அம்பர்

சுத்தமான கோரோசனை

சுத்தமான  கஸ்தூரி

நவபாஷாணம்  ( ஒன்பதும் தேவை )

சுத்தமான அர்த்தர்

சுத்தமான பன்னீர் மற்றும் 


சிறிதளவு பஞ்சகவ்யம்,

( பஞ்சகவ்யம் என்பது பசுஞ்சாணம்,பசுங்கோமியம்,பசுந்தயிர்,பசும்பால்,பசு நெய் ஆகிய ஐந்தும் கலந்து செய்யப்படும் பொருளாகும் ).இவை அனைத்தையும் பொடிசெய்து நாம் ஏற்கனவே தயாரித்த சாம்பலுடன் கலந்து நன்றாக காய வைக்க வேண்டும்.


பிறகு ஒரு மெல்லிய பருத்தி துணியில் கொட்டி நன்றாக சலிக்க வேண்டும்.சலித்த பிறகு வரும் சுத்தமான விபூதியை புதிதாக ஒரு வெள்ளை நிற பருத்தி துணியில் இந்த விபூதியை கொட்டி ஏதாவது ஒரு பழைய சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள சிவலிங்கத்திற்கு நாம் கொண்டு செல்லும் துணி பையுடன் விபூதியை அபிஷேகம் செய்ய வேண்டும்.


அப்படி செய்து சேகரித்த புனிதமான அந்த விபூதியை ஒரு வில்வம்பழ குடுவையிலோ அல்லது செம்பு பாத்திரத்திலோ சேகரித்து வைத்துக்கொண்டு, கீழ்வரும் மந்திரத்தை 10 ஆயிரத்து எட்டு தடவை ஜெபிக்க வேண்டும் மந்திரம் ஜெபிக்கும் பொழுது இந்த விபூதியை நம் கையில் வைத்துக் கொண்டு வடக்கு முகமாக அமர்ந்து மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.


உச்சரிக்க வேண்டிய மந்திரம் : 

ஓம்  ஸ்ரீம் க்ரீம் ஹ்ரீம் க்லீம்  க்லௌம்  நமசிவய யநமசிவ வயநமசி சிவயநம மசிவயந எனக்கு அனைத்தும் வசி   வசி சிவ சிவ ஸ்வாக 


இந்த மந்திரத்தை ஒருமுகமாக 10008 தடவை ஜெபித்து பிறகு விபூதியை நாம் தினமும் வைத்துக்கொண்டு சென்றால் நாம் நினைக்கும் அத்தனை விஷயங்களும் நடக்கும்.அனைத்து காரியங்களும் நூற்றுக்கு நூறு சாத்தியமாகும். சிவனின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.

நன்றி 

அரிய தகவல்கள் தொடரும் ...

வியாழன், 13 அக்டோபர், 2022

தேள் கொட்டினால் விஷம் ஏறாமல் இருக்கும் வித்தை

தேள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்...

இன்று தேள் கொட்டினால் அதன் விஷம் நம் உடலை பாதிக்காமல் இருக்கும் வித்தையைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.


ஆதிவாரம் அதிகாலை சூரியன் உதயத்திற்கு முன்னர் கருங்கருணை மூலிகைக்கு காப்புக்கட்டி பொங்கலிட்டு தீபாரதனை காட்டி தேங்காய் பழம் உடைத்து பூஜை செய்து மூலிகை சாப நிவர்த்தி மந்திரம் கூறிவிட்டு வந்து விடவும்.

பின்னர் சாயங்காலம் சென்று அந்த மூலிகையின் அடி வேரை அறுத்து மோதிரம் போல விரலில் சுற்றிக்கொண்டால் தேள் கொட்டினால் விஷம் உடலில் ஏறாது.

வேண்டும் என்றே தேளை கொட்ட வைத்து வேடிக்கை காட்டினாலும் தேள் விஷத்தினால் ஒன்றம் ஆகாது...

பின் குறிப்பு : தேள் கடித்தவருக்கு இதய நோய்கள் பாதிப்பல்லை.தேளின் விஷமானது இரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்து உறைவதை தடுக்கிறது.

நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...



 

ஞாயிறு, 9 அக்டோபர், 2022

பழுத்த இரும்பு சுடாமல் இருக்கச்செய்யும் வித்தை

 நாம் எல்லோருக்குமே கூட்டத்தில் வித்தை காட்ட வேண்டும் என ஆசையாக இருக்கும்.

அப்படி ஆசை உள்ளவர்கள் இந்த வித்தையை செய்து காட்டினால் எல்லோரும் இவர் பெரிய வித்தைகள் தெரிந்தவர் என உங்களை புகழ்ந்து பாராட்டுவார்கள்.

இப்போது வித்தைய எப்படி செய்வது என காணலாம்...



தேவையான பொருட்கள்.

1,வெங்காயச்சாறு

2, கற்றாலைச்சோறு (சதைப்பற்று)

3, விளக்கெண்ணெய், இவை மூன்றையும் ஒன்றாக கலந்து கூழ் போல ஆக்கிக்கொண்டு கைகளில் நன்றாக தடவிக்கொண்டு பழுத்த இரும்பு கம்பியை தொட்டால் அக்கம்பியானது கைகளை சுடாது.

நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...

வெள்ளி, 7 அக்டோபர், 2022

குழித்தைலம் இறக்கும் முறை

 மருத்துவத்திற்கும்,மாந்திரீகத்திற்கும் மூலிகைகள் மற்றும் பல சரக்குகளை பயன்படுத்தும்போது அதன் குழித்தைலம் நமக்கு தேவைப்படும்.முறையாக குழித்தைலம் இறக்கவில்லை என்றால் அந்த குழித்தைலம் முழுமையாக பலனளிக்காது.

அந்த குழித்தைலத்தை எப்படி முறைப்படி  இறக்குவது என்று தெரிந்து கொள்ளுங்கள்...



சாதகமான இடத்தில் இரண்டடி அகலம் இரண்டடி நீளம் இரண்டடி ஆழம் கொண்ட ஒரு குழியை தோண்டிக்கொள்ள வேண்டும்.

குழியின் நடுப்பகுதியில் ஒரு சிறு குழியை தோண்டி ஒரு கண்ணாடி குடுவையை வைக்க வேண்டும் அதன் பிறகு ஒரு மண்பானையை எடுத்து அதன் அடிப்பகுதியில் சிறு சிறு துளைகளாக பத்து துளைகள் இட வேண்டும்.

இந்தப்பானையில் நமக்கு எதில் குழித்தைலம் தேவையோ அதைப்போட்டு குழியின் மையப்பகுதில் உள்ள பீங்கான் குடுவைமேல் வைக்கவேண்டும்.

நாம் பானையில் போட்ட பத்து துளைகளும் அந்த பீங்கான் குடுவைக்குள் அடங்கியிருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.அப்போதுதான் நாம் இறக்கும் குழித்தைலம் சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும்.

இப்போது பானையை சுற்றி வறட்டியால் நிரப்பி விட்டு பானையின் வாய்ப்பகுதியை பானைக்கு சரியான அளவுள்ள மூடியால் சீலைமண்(களிமண்ணை குழைத்து அதில் தோய்த்து எடுத்து துணி)கொண்டு  இறுக்கி மூடி விட வேண்டும்.

வறட்டி முழுவதுமாக எரிந்து முடிந்து  சாம்பலான பிறகு கவனாமாக பானையை இறக்கி விட்டு அதனடியில் உள்ள பீங்கான் குடுவையை எடுத்துப்பார்த்தால் அதில் நாம் இறக்க நினைத்த தைலம் இறங்கியிருக்கும்.

இறக்கிய தைலத்தை பத்திரப்படுத்திக்கொண்டு கையாளும்  முறைகளை கையாண்டு கவனமாக உபயோகிக்க நல்ல பலனைத்தரும்.

நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...


புதன், 5 அக்டோபர், 2022

உலகில் அனைத்தும் வசியமாகும் வித்தை

உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும்  வசியம் செய்வது, நமக்கு எதிராக செயல்படுபவர்களை செயல்பட விடாமல் செய்வது, நமக்கு வேண்டாதவர்களை நமக்கு சாதகமாய் வேலை செய்யவைப்பது,எதிரிகளை வணங்க வைப்பது  போன்றவைகள்தான் சர்வலோக வசியம்.

இப்போது இந்த சர்வ லோக வசிய முறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.


தேவைப்படும் மூலிகைகள் : 

1,செவ்வகத்தி



2,நின்றால் சிணுங்கி



3,ஆவாரை



4,முல்லை



5,கூத்தன் குதம்பை


ஆகிய மூலிகைகளுக்கு காப்பு கட்டி வழக்கம் போல் முறையாக பூஜை செய்து அனைத்து மூலிகைகளின் வேர்களையும் சம எடையாக எடுத்துக்கொண்டு பன்னீர் விட்டு நன்றாக மை போல அரைத்து சிமிழில் அடைத்து பூஜை அறையில் வைத்து கீழே உள்ள மந்திரத்தை 1008 தடவை உச்சரித்து இந்த மையை உயிரூட்ட வேண்டும்.

நீங்கள் எப்போதும் வெளியே செல்லும்போது இந்த மையை சிறிதளவு  எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு சென்றால் அனைத்து உயிர்களும் (எதிரிகள் உட்பட) உங்களை வணங்கும்.

முக்கியம் : 

பூஜையின் போது கூற வேண்டிய மந்திரம்...

"வசி வசி சகலமும் வசி சர்வலோகமும் வசி சகலரும் வசி".

நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...

_____________________________________________________

செவ்வாய், 4 அக்டோபர், 2022

செய்வினை வைத்தது யார் என கண்டுபிடிக்கும் வித்தை

 நாம் எல்லோருக்குமே  செய்வினை என்றால் என்ன என்பது நன்றாக தெரிந்து இருக்கும்.

அப்பேர்பட்ட செய்வினையை நமக்கு யார் வைத்திருப்பார்கள் என்ற சிந்தித்திக்கொண்டே இருப்போம் அல்லவா...?

இனிமேல் அப்படி தேவையில்லாமல் மனசை குழப்பி சிந்திக்க தேவையில்லை.

ஏனென்றால் நமக்கு செய்வினையை யார் வைத்திருப்பார்கள் என்று நாமே கண்டுபிடிக்கலாம். 


செய்வினையை வைத்தது யார் என கண்டுபிடிக்கும் வித்தை : 

மலைகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய நிலவாகை என்னும் மூலிகை விதையை பத்து பலம் எடுத்து அதனுடன் தலைமஞ்சள் கொடி மாவு,முப்பூ ஆகிய இரண்டையும் ஒரு விராகன் எடை எடுத்து சேர்த்து நன்றாக அரைத்தெடுத்து வடைபோல தட்டி உலர்த்தி குழித்தைலம் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

அதன்பின் ஆக்காட்டி குருவியின் முட்டைகளை எடுத்து சிற்றண்ட தைலம்போல இதில் தைலம் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது முன்னர் செய்த நிலவாகை தைலத்தோடு இந்த ஆக்காட்டி குருவி முட்டையின் தைலத்தையும் ஒன்றாக நன்றாக கலந்து ஒரு சிமிழியில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும்...

இந்த தைலத்தை உங்களுக்கு தேவைப்படும்போது நீங்கள் யாரை குருவாக மனதில் நினைத்து வழிபடுவீர்களோஅவர்களை நினைத்து வெற்றிலையில் தடவி பார்க்க செய்வினை வைத்தவரின் முகம் நன்றாக தெரியும்.இந்த தைலத்தை வைத்து இதே முறையில் திருடியது யார் என்றும் கண்டுபிடிக்கலாம்.

நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...

_____________________________________________________




திங்கள், 3 அக்டோபர், 2022

புதையல் இருக்குமிடம் அறியும் வித்தை

 வணக்கம்...

நாம் ஏற்கனவே முந்தைய பதிவில் நிலம்புரண்டி மூலிகை பற்றி தெளிவாக பதிவிட்டிருந்தோம்.

இன்று அந்த நிலம்புரண்டி மூலிகையை வைத்து எப்படி புதையலை கண்டுபிடிப்பது என்ற வித்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.


 நிலம்புரண்டி மூலிகையை பறிக்க வேண்டிய நாட்கள்.

1,ஞாயிற்றுக்கிழமை 

2,செவ்வாய்க்கிழமை 

3,வியாழக்கிழமை 

இந்த மூன்று கிழமைகளில் ஏதாவது ஒரு நாளில் அதிகாலையில் (சூரியன் உதிக்கும் முன்) சென்று நிலம்புரண்டி மூலிகையை சுற்றி சுத்தம்  செய்து நாம் முந்தைய பதிவில் கூறியது போல சாப நிவர்த்தி செய்து அந்த மூலிகைக்கு உயிரூட்டி,காப்புக்கட்டி முறைப்படி பூஜை செய்து பிடுங்கி வந்து நிலம்புரண்டி மூலிகையை குழித்தைலம் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும். 

நிலம்புரண்டி மூலிகையின் குழித்தைலத்தோடு சேர்க்க வேண்டிய மற்ற சரக்குகள்...

1,கோரோசனை

2,ஜவ்வாது 

3,பச்சைக்கற்ப்பூரம் 

இந்த மூன்றையும் சம எடையாக எடுத்து நிலம்புரண்டி மூலிகையின் குழித்தைலத்தோடு நன்றாக குழைத்து நல்ல மை போல் ஆனதும் ஒரு சிமிழில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

மைக்கு உயிரூட்டும் முறை : 

அஞ்சனாதேவி மந்திரம் ஆயிரத்தியெட்டு முறை ஆஞ்சநேய மந்திரம் ஆயிரத்தியெட்டு முறை உச்சரித்து இந்த மைக்கு உயிரூட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

தேவையான போது இந்த மையை ஒரு பாசிப்பயறு அளவு எடுத்து வெற்றிலையில் தடவிப்பார்க்க பாதளத்தில் உள்ள புதையல்கள் வெற்றிலை மீது நன்றாக தென்படும்.

நிலம்புரண்டி மூலிகையின் வேரை நன்றாக தீயில் கருக்கி சுத்தமான நீரில் கரைத்து  புதையல் இருக்கும் என்று நினைக்கும் இடத்தில் ஊற்றிவிட்டு வந்துவிட வேண்டும்.

மறுநாள் சென்று பார்க்கும்பொழுது அந்த இடம் வறண்ட கரிசல் பூமி போல வெடித்து இருந்தால் அந்த இடத்தில் புதையல் உள்ளது என்று அர்த்தம். அவ்வாறு வெடிக்கவில்லை என்றால் அங்கு ஒன்றும் இல்லை என்று அர்த்தம்.

நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...


ஞாயிறு, 2 அக்டோபர், 2022

மாயாஜால வித்தைகள் கைகூட ஜாலக்காள்தேவி வசியம்...

 வணக்கம் 

மாயாஜால வித்தைகள்

சித்து விளையாட்டுகள் 

மந்திரம்

தந்திரம் 

போன்றவை கைகூடி வர வேண்டும் என்றால் ஜாலக்காள் தேவியை முறையாக வசியம் செய்ய வேண்டியது மிக மிக முக்கியம்.

ஜாலக்காள் தேவியை வசியம் செய்யாமல் எந்தவித வித்தைகளும்,மந்திர,தந்திர வேலைகளும் சாத்தியமில்லை...



ஜாலக்காள்தேவியை வசியம் செய்யும் மந்திரம்...

"ஆம் றியும் அவ்வும் ஐயும் ஜாலாக்காள் தேவி ஆக்ரூஷய றாறா" 

என்கிற அதி அற்புதமான  மந்திரத்தை 

தேங்காய்

பழம்

வெற்றிலை

பாக்கு

பொங்கல்

போன்றவைகள் படைத்து வழக்கம்போல் முறையாக பூஜை செய்து தீபாரதனை காட்டிவிட்டு வடக்கு நோக்கி அமர்ந்து நாற்பத்தியெட்டு நாட்கள் ஒரு லட்சம் தடவை உச்சரிக்க இந்த ஜாலக்காள்தேவி வசிய மந்திரம் உயிர் பெற்று ஜாலக்காள்தேவி நமக்கு வசியமாவாள்.

நினைத்த வித்தைகள் முறையாக செய்ய நமக்கு வசப்படும்...

நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...

   




சனி, 1 அக்டோபர், 2022

பிரயாணம் போகும்போது முக்கியமாக கவனிக்க

 நாம் எல்லோரும் வெளியூர் செல்லும் போது சகுனம் பார்த்து செல்வது மிக மிக  அவசியம்...

ஒரு சிலர் வெளியே கிளம்பும் போது எதிரே தென்படுவதை வைத்து சகுனம் பார்த்து செல்வார்கள்.

இன்னும் ஒரு சிலர் வேறு ஏதாவது முறையில் சகுனம் பார்த்து செல்வார்கள்.

ஆனால் வெளியூர் பிரயாணம் மேற்க்கொள்ளும்போது சாஸ்திரம் பார்த்து செல்வது மிக மிக முக்கியம்.

நாம் இப்போது பிரயாண சாஸ்திரத்தின் மிக முக்கியமான ஒன்றை மட்டும் பார்க்கலாம்.மற்றவை அடுத்தடுத்த வேறு பதிவுகளில் பதிவிடுகிறேன்.


திருவாதிரை,பரணி,கிருத்திகை,ஆயில்யம்,

பூரம்,பூராடம்,பூரட்டாதி,விசாகம்,சுவாதி,

சித்திரை,மகம்,கேட்டை போன்ற 12 நட்சத்திரங்கள் வரும் நாட்களிள் பிரயாணம் போகவே கூடாது.மரணம் கூட சம்பவிக்கும்.

மிக அவசியம்,போய்த்தான் ஆக வேண்டும் என்றால் அதற்கு சில வழிமுறைகள் உண்டு அது பற்றி வேறு ஒரு பதிவில் பதிவிடுகின்றேன்.

முக்கிய குறிப்பு : இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் கடன் கொடுத்தாலும்,வியாதி வந்து படுத்தாலும் மீளவே முடியாது.

நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...

_____________________________________________________




வெள்ளி, 30 செப்டம்பர், 2022

மூலிகைகளுக்கு சாப நிவர்த்தி செய்யும் முறை

 நாம் ஏற்கனவே முன்னர் ஒரு பதிவில் மூலிகைகளுக்கு உயிர் கொடுக்கும் முறையை பற்றி பதிவிட்டிருக்கின்றோம்...

எந்த ஒரு மூலிகையாக இருந்தாலும் நாம் தேவைக்கு அதனை பறிக்கும்பொழுது சாதாரணமாக பறித்துவிட்டால் அந்த மூலிகையின் குணம் நமக்கு பலனளிக்காமல் போய்விடும். 

முறையாக காப்புக்கட்டி தீபாரதனை காட்டி பொங்கல் முதலியவை வைத்து பூஜை செய்த பின்னர் சாப நிவர்த்தி செய்து அந்த மூலிகைகளுக்கு உயிரூட்ட வேண்டும்.அப்போதுதான் அந்த மூலிகையின் பலன் நமக்கு முழுமையாக கிடைக்கும்.

ஒரு சில மூலிகைகளுக்கு சேவல் போன்றவைகள் பழி கொடுக்க வேண்டும்.அது பற்றி இன்னொரு பதிவில் விரிவாக கொள்கின்றேன்.

இன்று அந்த அரிய குணமுள்ள மூலிகைகளுக்கு சாப நிவர்த்தி செய்யும் முறையைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.



நமக்கு எந்த மூலிகை தேவைப்படுகின்றதோ அந்த மூலிகையை சுற்றி நன்கு சுத்தம் செய்து

பின்னர் வழக்கம்போல் முறையாக பூஜை முறைகளை செய்து 


"ஓம் சத்தி சாபம்           நசிநசி

சகல சாபம்                    நசிநசி 

சித்தர் சாபம்                 நசிநசி 

மூலிகை சாபம்            நசிநசி 

சகல தேவர்கள் சாபம் நசிநசி 

ஓம் காளி ஓம் பிடாரி 

ஓம் நசிமசி வய சுவாகா"... என்கின்ற மந்திரத்தை ஒன்பது தடவை கூறி விட்டு நகம் படாமல் மூலிகைகளை பறிக்க வேண்டும்.

இவ்வாறு முறையாக செய்யும்போது நாம் பறிக்கும் மூலிகையானது முழுமையாக பலனளிக்கும்.அந்த மூலிகையின் சாபம் நம்மை தாக்காமல் காத்துக் கொள்ளலாம்.

நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...






புதன், 28 செப்டம்பர், 2022

விந்து வெளியேறாமல் தடுக்கும் வித்தை

விந்து விட்டவன் நொந்து கெடுவான் 

என்பது சித்தர்கள் வாக்கு.

அதிகமாக விந்துவை வெளியேற்றுவதால் சீக்கிரம் நமது உடல் வலுவிழந்து விடும்.

விந்துவை வெளியேற்றுவதால் பல உடல் உபாதைகளுக்கு ஆட்படுகின்றோம்.

சரி இப்போது விந்துவை எப்படி வெளியேறாமல் தடுப்பது என்ற வித்தையைக்காண்போம்.



ஆடுதின்னாப்பாளை விதை

பூமிச்சர்க்கரைகிழங்கு 

பூனைக்காலி விதை இவை மூன்றையும் இரண்டிரண்டு விராகனெடை எடுத்து பசும்பால் விட்டு நன்றாக அரைத்து காலை மாலை என இரண்டு வேளைகள் 12 நாள் சாப்பிட்டு வர விந்து கெட்டிப்படும்.

எத்தனை பெண்களை புணர்ந்தாலும் விந்து வெளியேறாது.உடலின் சக்தி விரயம் தடுக்கப்படும்.

சரி இவ்வாறு சாப்பிட்டு கெட்டியான விந்துவை எப்படி இளக்கி வெளியேற்றுவது என்றால் எலுமிச்சம்பழம் சாப்பிட்டு வர விந்து எப்போதும் போல வெளியேறும்.

நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...



 


செவ்வாய், 27 செப்டம்பர், 2022

ஜோதிடம் கால அளவுகள்

 நாம் ஒருவருக்கு ஜோதிடம் பார்க்கும்பொழுது ஜாதககாரரின் பலனை துல்லியமாக கூற வேண்டுமானால் நமக்கு ஜோதிடத்தின் கால அளவுகள் மனப்பாடமாக தெரிந்திருக்க வேண்டும்...


அவ்வளவு முக்கியமான ஜோதிட கால அளவுகளைப்பற்றி தெரிந்து கொள்வோம்...




60நொடி               - ஒரு நிமிடம்

60நிமிடம்             - ஒரு மணி 

24 மணி                - ஒரு நாள்

15 நாள்                  - ஒரு பட்சம்

2பட்சம்                  - ஒரு மாதம் 

2 மாதம்                 - ஒரு ருது 

3ருது                     - ஒரு அயனம் 

2அயனம்              -ஒரு வருடம் 

12 வருடம்              - ஒரு குறுவட்டம் 

30 வருடம்             - ஒரு சனிவட்டம் 

60 வருடம்             - ஒரு சுற்று 

60 தத்பரைகள்     - ஒரு வினாடி 

24 வினாடி             - ஒரு நாழிகை 

2½ நாழிகை          - ஒரு மணி

60 நாழிகை           - ஒரு நாள் 

60 உபவிகலைகள்- ஒரு விகலை 

60 விகலை             - ஒரு கலை 

60 கலைகள்           - ஒரு பாகை 

30 பாகைகள்          - ஒரு ராசி

360 பாகை              - ஒரு சுற்று 

1 நட்சத்திரம்            - 13 பாகை 20 கலை 

1 நட்சத்திர பாதம்    - 3 பாகை 20 கலை


ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் இவற்றை நன்றாக மனனம் செய்து கொள்ளுங்கள்.

நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...


திங்கள், 26 செப்டம்பர், 2022

நிலம்புரண்டி மூலிகையின் மர்மம்

 


நிலம்புரண்டி மூலிகை ஒரு அற்புதமான மற்றும் விசித்திர குணமுள்ள மூலிகை ஆகும்.

நிலம்புரண்டி மனிதர்களை கண்டால் அது வளர்ந்திருக்கும் இடத்திலேயே நிலத்தை கீறிக்கொண்டு மண்ணுக்குள் மறைந்து விடும்.

நிலம்புரண்டி இப்படி மனிதர்கள் கண்ணில் படாமல் மறைவதற்கு காரணம் என்னவென்றால் இந்த நிலம்புரண்டி மூலிகை ஒரு புதையல் காட்டி மூலிகை ஆகும்.

மனிதர்கள் இதனை தவறாக பயன்படுத்தி புதையலை எடுத்து விடுவார்கள் என்ற காரணத்தினால் இந்த நிலம்புரண்டி மூலிகை மனிதர்களை கண்டவுடன் மண்ணில் மறைந்து விடுகின்றது.

இந்த நிலம்புரண்டி மூலிகையை மண்ணுக்குள் மறையாமல் எடுக்க வேண்டும் என்றால் நமது கைகளில் கொஞ்சம் தேத்தான் கொட்டைகளை வைத்துக்கொண்டு தேடினால் இந்த நிலம்புரண்டி மூலிகையை மண்ணுக்குள் மறைய விடாமல் எடுக்கலாம்.

நன்றி அடுத்த பதிவில் சந்திப்போம்...

சனி, 24 செப்டம்பர், 2022

மூலிகைகளுக்கு உயிர் கொடுக்கும் முறை

 நாம் எல்லோருக்குமே மூலிகைகள் என்றால் என்ன என்று தெரிந்திருக்கும்.

உலகில் பலவகையான மூலிகைகள் உள்ளன...

அதுவும் குறிப்பாக இந்தியாவில் மூலிகைகள் அதிகம்.

மூலிகைகள் மருந்திற்கும்,மந்திர தந்திரத்திற்கும்,இன்ன பிற செயல்களை செய்வதற்கு பயன்படுகின்றது.

அப்படிப்பட்ட மகத்துவம் வாய்ந்த மூலிகைகளை நாம் சாதரணமாக பறிக்க கூடாது.

மூலிகையை பறிக்கும் முறை காண்போம்...!

நமக்கு தேவைப்படும் மூலிகைகளை தேவையான சமயத்தில் பறிக்கும் பொழுது அதனை சுற்றி நன்கு சுத்தம் செய்து கன்னி நூல் காப்புக்கட்டி பொங்கலிட்டு தேங்காய் பழம் உடைத்து பூஜை செய்து வேரறாமல் பிடுங்க வேண்டும்.

ஓவ்வொரு மூலிகைகளுக்கு ஓவ்வொரு நாள்கிழமை உண்டு...

முக்கிய குறிப்பு : 

மூலிகைகளை பிடுங்கும் முன்பு  

"ஓம் மூலி சர்வ மூலி 

உன்னுடைய உயிர் 

உன்னுடலில் நிற்க சுவாகா" 








என்ற மந்திரத்தை முப்பத்தியிரண்டு முறை மனதுக்குள் கூறிவிட்டு பிடுங்க வேண்டும்.

வெள்ளி, 23 செப்டம்பர், 2022

பெண்கள் சாமியாடுவதை நிறுத்த

 சிலர் அவர்கள்  வீட்டில் உள்ள பெண்கள் மேல் சாமி வந்து ஆடுவதை பார்த்திருப்பீர்கள்.

இவர்கள் கோவில்களில் மட்டுமல்லாது வீடுகளில் சில நேரம் சாமி வந்தது போல் கத்திக்கொண்டு ஆடுவார்கள்.

சரி இப்போது பெண்கள் சாமி வந்து ஆடுவதை நிறுத்தும் முறையைக்காண்போம்...

கல்லுருவி 

புல்லுருவி

கழுதை மயிர 

மனித தலை மயிர்

இவைகளை ஒன்றாக கருங்கம்பளி கயிற்றில் கட்டி சாமியாடும் பெண்கள் வீட்டில் போய் தெரியாமல் கட்டி விட அவர்கள் மேல் சாமி வந்து ஆட மாட்டார்கள்.

முக்கிய குறிப்பு : சாமியாடும் பெண்கள் வீட்டில் போய் கட்டும் முன்பு அ-இ-உ என்ற மூன்றெழுத்து மந்திரத்தை மூன்று தடவை உச்சரிக்க வேண்டும்...


       மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்



செவ்வாய், 20 செப்டம்பர், 2022

மூதேவி அகல சீதேவி குடியிருக்க

 நாம் எல்லோர் ஊரிலும் ஏதாவது ஒரு மர்மமான இடம் இருக்கும், பெரியவர்கள் அங்கு போகக்கூடாது என்று கூறுவார்கள்.பெரியவங்க சொன்னா கண்டிப்பாக காரணம் இருக்கும், 

அந்த காரணம் என்ன என்று முதலில் பார்ப்போம்.

பேய்,பிசாசு, முனி ,ஜடாமுனி,சங்கிலிமுனி, இரத்தக்காட்டேரி போன்றவைகள் ஆள் நடமாட்டமில்லாத இடம் ,யாரும் நகர்த்த முடியாத இடம்,மற்றும் வனம் போன்ற இடங்களில் குடியிருக்கும்.

இவைகள் அவ்விடத்தில் குடியிருப்பது மட்டுமின்றி அவ்வழி செல்லும் இளகிய மனமுள்ளவர்களை பயமுறுத்தி சந்தோஷமடையும்.

இவைகளை அவ்விடத்தை விட்டு விரட்டுவதோடு அல்லாமல் அதே இடத்தில் சீதேவியை வாசம் செய்ய கீழ்க்காணும் செய்முறையை செய்யுங்கள்.

மாயாஜாலம் 

எருமை மூத்திரம்

ஆட்டு மூத்திரம் 

கழுதை மூத்திரம்

குதிரை மூத்திரம்

நாய் மூத்திரம் 

இவைகளை ஒன்றாய் ஒரு மண்பாண்டத்தில் கலந்து ஆதிவாரம் (ஆதிவாரம் என்பது ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் இவைகள் இருக்குமிடத்தில் தெளித்து விட்டு அந்த மண்பானையை அவ்விடத்தில்  உடைத்து விட வேண்டும்....அவ்வாறு உடைத்த மண்பானையில் நான்கு துண்டுகளை எடுத்து நான்கு திசைகளிலும் புதைத்து வைத்து விட வேண்டும்.

அவ்வாறு புதைத்து வைத்து விட்டு திரும்பி பார்க்காமல் வந்து விட வேண்டும்.

பின்னர் மூன்று நாள் கழித்து அவ்விடம் சென்று

அரைத்த மஞ்சள்

குங்குமம் 

தேங்காய் 

பழம் 

கற்பரம் 

சாம்பிராணி 

வெற்றிலை 

பாக்கு 

செந்தாமரை 

இவைகளை கொண்டு அவ்விடத்தில் தாமரை இதழ்கள் மேல் வைத்து வழக்கம் போல் பூஜை செய்து அவ்விடத்தை மூன்று முறை வலம் வந்து ஆறு முறை தோப்புக்கரணம் இட்டு வணங்கினால் அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்த மூதேவிகள் அகண்டு சீதேவியாகிய லட்சுமி வாசம் செய்வாள்.

பின்குறிப்பு : பூஜையின் போது சொல்ல வேண்டிய வாசகம் (மனதுக்குள்)

என் இருதயக்கமலத்தில் வீற்றிருக்கும் உலகராணி அம்மணி நீ இப்போது எழுந்தருளியிருக்கும் இவ்விடம் லட்சுமி கடாட்சமும் குபேர கடாட்சமும் நீங்காமலிருக்க வேண்டும் தாயே...

 ...மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்... 







யட்சிணி வசியம்

 நமது நாட்டின் சித்தர்கள் பலர் தங்களின் பல ஆண்டு தவங்களின் மூலம் மனிதர்களுக்கு உதவும் பல அறிய கலைகளை கண்டுபிடித்தனர். அவற்றில் ஒன்று தான் மா...

மாயாஜாலம் தளத்தில் பிரபலமான பதிவுகள்